Friday, September 2, 2011

நிறுவுனர் தினமும்,பரிசளிப்பு விழாவும் 2011

 
 
பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தின் நிறுவுனர் தினமும்,பரிசளிப்பு விழாவும்
 04-09-2011 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு வித்தியாலய முன்றலில் நடைபெறவுள்ளது.
வித்தியாலய அதிபர் திரு.க.சந்திரசேகரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவனும்,சிறப்பு விருந்தினராக சர்வோதய நிறுவனத்தின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் சி.சத்தியகுமாரும் கலந்து சிறப்பிப்பர்.நிறுவுனர் நினைவுப் பேருரையை ஆசிரியையும், பழைய மாணவியுமான திருமதி நாகராணி சீதரன் நிகழ்த்துவார்.மெய்கண்டான் சிறப்பு மலரும் இந்நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்படும்.நூல் ஆய்வுரையை பழைய மாணவரும் பிரபல வர்த்தகருமான சோம.திருச்செல்வம் நிகழ்த்துவார்.

No comments:

Post a Comment